Monday, October 1, 2012

உலகின் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இசைத்திருவிழா

பெல்ஜியத்தில் கடந்த யூலை மாத கோடை காலத்தில் உலகின் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடி, கொண்டாடிய இசைத்திருவிழா நடைபெற்றது.
Tommorow Land (நாளைய உலகம்) எனப்படும் டிஸ்னியின் இசைத்திருவிழாவின் 8வது எடிஷனாக யூலை 27,28,29 மூன்று தினங்களும் நடைபெற்ற இந்நிகழ்வில் 75 நாடுகளிலிருந்து 180,000 சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
இசைநிகழ்ச்சிகள், ஆடல் பாடல் கொண்டாட்டங்கள், கலியாட்ட நிகழ்வுகள் என கலைகட்டிய இந்நிகழ்வில் சுமார் 400 இசைக்கலைஞர்கள் பங்கெடுத்தனர்.
இந்த இசைத்திருவிழாவை இரண்டு மாதங்களுக்கு பின்பு 20 நிமிடங்கள் அடங்கிய காணொளியை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Monday, February 28, 2011

பாடல்

பாடல் என்பது இசையூட்டப்பட்ட கவிதையாகும் அதாவது ஏதாவது செற்தொடர்களை இசைவடிவாக்கிச் சொல்வதே பாடல் எனப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தில் பாடல்களை.  கீதம். கீர்தனை. கிருதி. வர்ணம். காவடிச்சிந்து. நாட்டார் பாடல் என்று அவற்றின் கருத்திற்கும். இசையின் தன்மைக்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப் படுகின்றன. இவற்றை விட நாடகப்பாடல். சினிமாப்பாடல். நாட்டுப்புறப்பாடல் என்றும் பிரிக்கப்படுகின்றன. எப்பாடல்களாயினும் அவற்றை மனிதர்களால் மட்டுமே பாடமுடியும்.

Sunday, February 27, 2011

இசை

 இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை.

இசை முறைகள்

உலகில் பல்வேறு இசை முறைகள் வழங்கி வருகின்றன. அவையாவன:
  • இந்திய இசை
  • ஐரோப்பிய இசை
  • பாரசீக இசை
  • கிரேக்க இசை
  • எகிப்திய இசை
  • சீன இசை
  • அரபு இசை
இந்த ஒவ்வொன்றும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 இந்திய இசை

இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள்/இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப் பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர்செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசைமரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன.
பின்வருவன இந்தியாவின் முக்கிய இசை மரபுகளுட் சிலவாகும்.
  • கர்நாடக இசை
  • இந்துஸ்தானி இசை
  • கசல்
  • கவ்வாலி
  • கிராமிய இசை

 இந்திய இசையின் தனித்தன்மைகள்

  • இந்திய இசை தனி இசை (melody)யை ஆதாரமாகக் கொண்டது. மேற்கத்திய இசை கோர்வை இசை (harmony)யை ஆதாரமாகக் கொண்டது.
  • இந்திய இசையின் இராக அமைப்பு, பகைச்சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம், பகைச்சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப் பண்கள் ஆகும். இந்திய இசை வரலாற்றிலேயே இராக தாளத்துடன் நமக்குக் கிடைக்கப்பட்ட மிகப் பழமையான இசை வடிவம் தேவாரம் ஆகும். எண்ணற்ற இராகங்களுக்குத் தேவாரப் பண்களே ஆதாரமாயிருந்தன. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான இசைதான் இருந்தது. அக்காலத்தில் இந்துஸ்தானி, கர்நாடகம் என்று பிரிவு ஏற்படவில்லை. எனவே இந்திய இசைக்கே ஓர் அடிப்படியாக இருப்பது பண்கள் என்று கூறலாம்.
இசை வடிவங்கள் (தமிழ்)
தமிழிசை | கருநாடக இசை | கிராமிய இசை | மெல்லிசை| திரையிசை | ராப் இசை (சொல்லிசை) | பாப் இசை | துள்ளிசை | ராக் இசை